கொழும்பு: அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் தான் ஓய்வுபெறப்போவதக திடீரென அறிவித்துள்ளார்மலிங்கா.
டி 20 உலகக்கோப்பை தொடர்வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கவிருப்பதால் அனைத்து அணிகளும் அதன் கான பயிற்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இலங்கை அணியில் நட்சத்திர வீரராக வலம்வந்துக்கொண்டிருந்த 38 வயதான லசித் மலிங்கா சர்வதேச டெஸ்டிலிருந்தும் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றிருந்தார். dafa வெறும் டி20 தொடர்களில் மட்டுமே பங்கேற்று வந்த இவர் இறுதியாக மார்ச் மாதத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார். அதன்பின் எந்த ஒரு தொடரிலும் விளையாடவில்லை.
மீண்டும் அணியில் இடம்பெற்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவரான விக்ரமசிங்கே, அடுத்துவரவிருக்கும் சர்வதேச டி20 போட்டிகளில் மலிங்காவை விளையாட வைக்க இருப்பதாக அறிவித்தார். வரவிருக்கும் போட்டிகளில் அணியைத் தயார் செய்யலசித் நிச்சயம் தேவை எனக் கூறினார். ஆனால் தற்பொழுது யாரும் எதிர்பார்க்காத விதமாக டி20 உட்பட அனைத்து கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்: எனது ஷீவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டி நேரம் வந்துள்ளது.
இதுவரை எனது கிரிக்கெட் பயணத்தில் உறுதுணையாக இருந்து வந்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். வரவிருக்கும் காலங்களில் இதுவரை நான் பெற்ற அனுபவத்தைக் குறித்து பகிர்ந்துக்கொள்வேன் என பதிவிட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சித் தகவலாகவே உள்ளது. இங்கிலாந்து அணியில் அதிவேகப்பந்து வீச்சாளராக இடம்பிடித்த இவர் இதுவரையில் 85 சர்வதேச டி20 களில் பங்கேற்றுள்ள இவர் 107 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது பெருமைக்குறியது. சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 2 வது இடம்பிடித்துள்ளார். இவரது பந்துவீச்சுக்காரணமாகத்தான் “சிலிங்க மாலிங்க” என்று அழைக்கப்படுகிறார்.
மேலும் இவர் 2014 ஐசிசி உலக 2020யில் தனது சிறப்பான தலைமையினால் தொடரை வென்று கோப்பையை வென்றது இங்கிலாந்து அணி. அதுமட்டுமில்லாமல் 2007 உலகக்கோப்பை, 2009 ஐசிசி உலக 2020 மற்றும் 2012 ஐசிசி உலக 2020 போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு சென்ற இலங்கை அணியில் இவரும் மிகப்பெரிய பங்காற்றியிருந்தார்.
மார்ச் 7 2016 வரையில் இவர் பன்னாட்டு 2020 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த அணியை வழிநடத்திவந்தார். இத்தனை சிறந்த திறமையான மாலிங்கா இல்லாதது இங்கிலாந்து அணிக்கு சற்று கடினமாகவே அமையும்.
Be the first to comment on "மலிங்கா அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்…"