ஐபிஎல் 2022: வேகப்பந்துவீச்சில் ஆபத்தும்,சுழற்பந்துவீச்சில் பற்றாக்குறையும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கவலை அளிக்கிறது

www.indcricketnews.com-indian-cricket-news-076

நியூ டெல்லி: 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால்  ஏழு ஆண்டுகள் கழித்து  2019ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் முதன்முறையாக பிளேஆஃப் கட்டத்தை எட்டியது. இதுவரை டெல்லி உரிமையாளருக்கு தொலைதூர கனவாக இருந்த ஐபிஎல் கோப்பை , சந்தேகத்திற்கு இடமின்றி  நெருங்கிவருகிறது.

ஐபிஎல் 2022க்கு முன்னதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கால் பயிற்சியளிக்கப்பட்ட டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த், தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா, இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் மற்றும் ஆபத்தான வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரைத் தக்க வைத்துக்கொண்டது.

கடந்த சில ஆண்டுகளாக , டெல்லி கேபிடல்ஸ்-ன் வேகப்பந்துவீச்சு இரட்டையர்களான அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ககிசோ ரபாடா ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், ஐபிஎல் 2022ல் ரபாடாவை தக்வைத்துக்கொள்ள முடியாததால் , ஏலத்தில் எடுக்க கேபிடல்ஸ் முயற்சி செய்தும் பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது. இருப்பினும், இந்த மெகா ஏலம் டெல்லியின் உற்சாகத்தை குறைக்கவில்லை.

ஏலத்தின் முதல்நாளில், டேவிட் வார்னருடன் மீண்டும் இணைந்த டெல்லி அணி, பஞ்சாப் கிங்ஸால் வாங்கப்பட்ட  இடதுகை பேட்டர் ஷிகர் தவானுக்கு பதிலாக தொடக்க வரிசையில் களமிறங்கிறார். அஷ்வின் ஹெப்பர் மற்றும் யாஷ் துல் — அந்தந்த மாநில அணிகளுக்கு தொடக்க வீரர்களாக விளையாடுகின்றனர்.

கடந்த இரண்டு சீசன்களில், அஷ்வின் மற்றும் அமித் மிஸ்ரா போன்ற தரமான சுழற்பந்துவீச்சாளர்களை கொண்ட டெல்லி வரும் சீசனில் இரு வீரர்களையும் இழக்கிறது.  ஆனால், இடதுகை  பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்லில் குல்தீப்பின் செயல்பாடுகள் ஊக்கமளிப்பதாக இல்லை. அதே நேரத்தில் அக்ஸர் படேல் ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களில் மட்டையால் தனது திறமையை வெளிப்படுத்தினார்.மேலும் சுழல்-தாக்குதலில் விக்கி ஓஸ்ட்வால் மற்றும் பிரவின் துபே போன்ற உள்நாட்டு வீரர்கள் உள்ளனர்.ஆனால் அவர்கள் இதுவரை ஐபிஎல்லில் நிரூபிக்கப்படவில்லை.

மேலும் சிஎஸ்கேவின் முக்கிய அங்கமாக இருந்த ஷர்துல் தாக்கூர் இந்த சீசனில் டெல்லி வண்ணங்களை அணியவுள்ளார்.ஷர்துல் தாக்கூர் தவிர, மேற்கிந்தியத் தீவுகளின் ரோவ்மேன் பவல் மற்றும் மிட்செல் மார்ஷ் போன்ற ஆல்ரவுண்டர்களை டெல்லி கேப்பிடல்ஸ் தக்கவைத்துக்கொண்டது. இவர்களுடன் சர்ஃபராஸ் கான், விக்கி ஓஸ்ட்வால் மற்றும் லலித் யாதவ் ஆகியோர் கேப்பிடல்ஸ் அணிக்கான மற்ற ஆல்ரவுண்டர்கள் ஆவர். கடந்த சீசனில், மிடில் ஆர்டரில் ரிஷப் பந்தைத் தவிர ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மியர் போன்றவர்கள் இருந்தனர்.ஆனால்

இந்த சீசனில்,  சோதிக்கப்படாத மிடில்-ஆர்டருடன் நுழைகிறது. இதையடுத்து, பவல் தற்போது காயமடைந்துள்ளதால், மார்ச் 27ஆம் தேதியன்று மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான தொடக்க ஆட்டத்தில், சரியான நேரத்தில் குணமடைய முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.