ஐபிஎல் 2022: லக்னோ அணியை வீழ்த்தய ஆர்சிபி அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-0066

மும்பை: ஐபிஎல் தொடரின் 31ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி  பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி பேட்டிங்செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் சமீரா வீசிய முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரரான அனுஜ் ராவத் 4(5) ரன்களுடனும்,அடுத்துவந்த விராட் கோலி கோல்டன் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர்.

இதன்பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் வழக்கம்போல அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இருப்பினும் 3 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 23(11)ரன்கள் எடுத்தபோது குர்ணல் பாண்டியாவின் சுழற்பந்தில் சிக்கி ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் நீண்டநேரம் களத்திலிருந்து பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் நிதானமாக ஆடி ரன்களை குவித்தார்.

இந்நிலையில் தொடர்ந்து களமிறங்கிய பிரபுதேசாய் 10(9) ரன்களுடன் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஷபாஸ் அஹ்மத் 26(22) ரன்களுடன் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஒரு முனையில் தொடர் விக்கெட் சரிவுகளை அணி சந்தித்தாலும்,மறுமுனையில் நிலைத்துநின்று அதிரடியாக விளையாடி 11 பவுண்டரி,2 சிக்ஸர் விளாசிய டூ பிளெசிஸ் 96(64) ரன்கள் எடுத்தபோது ஹோல்டர் வீசிய கடைசி ஓவரின் 5ஆவது பந்தில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இறுதியில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸருடன் 13(8)ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க, ஆர்சிபி அணி 20 ஓவருக்கு  6 விக்கெட் இழந்து 181 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக் 3(5) ரன்களுடனும், அடுத்துவந்த மனீஷ் பாண்டே 6(8) ரன்களுடனும் ஹசில்வுட்டின் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தனர்.

இதைதொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் கே.எல்.ராகுல் – க்ருணல் பாண்டியா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசிய தொடக்க வீரரான ராகுல் 30(24) ரன்களில் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி,2 சிக்ஸர் அடித்த குர்ணல் பாண்டியா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது  42 ரன்களுடன் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதற்கிடையே களமிறங்கிய தீபக் ஹூடா 13(14) ரன்களுடன் சிராஜ் பந்துவீச்சில் வெளியேறி ஏமாற்றமளித்தார். இதன் பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களான ஆயூஷ் பதோனி 13(14) ரன்களுடனும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 24(15) ரன்களுடனும் ஹசில்வுட் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் ,20 ஓவருக்கு 8 விக்கெட் இழந்த லக்னோ அணி 163 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதன்மூலம் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது.

Be the first to comment on "ஐபிஎல் 2022: லக்னோ அணியை வீழ்த்தய ஆர்சிபி அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது."

Leave a comment

Your email address will not be published.


*