ஐபிஎல் 2022: ராகுல் திவேதியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார்

www.indcricketnews.com-indian-cricket-news-069

நியூ டெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு அரபு மண்ணில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் உடனான 223 ரன்கள் சேஸிங் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் பௌலர் காட்ரேல் வீசிய ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் மிரளவைத்த ராகுல் திவேதியா, ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் குஜராத் டைடன்ஸ் அணியால் 9 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அவருக்கு விலைக்குறி கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தாது என்றாலும் திவேதியா பொறுப்பேற்க ஆர்வமாக உள்ளார்.

இந்நிலையில் வரும் மார்ச் 28ஆம் தேதியன்று வான்கடே மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் முதன்முதலில் புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உடன் மோதவுள்ளது. ஆகையால் குஜராத் அணி , ஹர்திக் தலைமையில் ஒரு வலுவான அணியை உருவாக்கியுள்ளது. அதிலும் உலகின் தலைசிறந்த டி20 சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரஷித் கானின் சேவையையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து மிடில் ஆர்டரில் விளையாடுவது குறித்து அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ராகுல் திவேதியா செவ்வாய்க்கிழமையான நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ” மிடில் ஆர்டரில் என்ன இருக்கிறது. பேட்டிங் வரிசையில் அனைவரின் பங்கும் ஒன்றுதான். நானும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் மிடில் ஆர்டரில் இருக்கிறோம்.எனவே நாங்கள் நிறைய பொறுப்பை ஏற்க வேண்டிவுள்ளது.குறிப்பாக பந்துவீசும்போது திட்டங்களை கடைபிடிப்போம்” .

“நீங்கள் சொன்னது போல் ஒரு ஆல்-ரவுண்டரின் பங்கு முக்கியமானது தான.அது ஒவ்வொரு அணியிலும் உள்ளது. 6-7-8 என்ற கணக்கில் பேட் செய்பவரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் அது முதன்மையான ஒரு ஃபினிஷராகும். அவர்களுக்கு நேரம் குறைவாக இருந்தாலும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே சிறப்பாக செயல்பட்டு அணியை ஒரு நல்லநிலைக்கு கொண்டு வரமுடியும்”

 “போட்டி தொடங்கியவுடன் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால், நாங்கள் நன்றாக முடிக்க முயற்சிப்போம். இதுவே நாங்கள் துரத்துகிறோம் என்றால், நாங்கள் எப்படி ஃபினிஷிங் லைனைக் கடப்பது என்று முயற்சிப்போம், அதற்கேற்ப நாங்கள் எங்களை தயார்செய்து கொள்வோம்” என்று திவேதியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் தனது விருப்பமான கிரிக்கெட் வீரர் முன்னாள் இந்திய ஸ்வாஷ்பக்லிங் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் என்று கூறிய  திவேதியா ஐபிஎல்-ல் வெற்றிபெறுவது குறித்து கூறுகையில்,” நான் ஐபிஎல் கோப்பையை இதுவரை வென்றதில்லை என்று நீங்கள் கூறலாம்.ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் வெற்றிபெற்று முடிக்கப்படாத வணிகத்தை முடித்துவிட்டேன் என்று அனைவரும் கூறினால், அதுவே எனக்கு கிடைத்த முதல் முன்னுரிமை”.

“எங்கள் அணி முதல் ஆண்டில் கோப்பையை வென்றால், அதைவிட பெரிய விஷயம் எதுவும் இருக்காது. எந்தவொரு சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட்டு அணி வெற்றிபெற முயற்சி செய்வேன்’இவ்வாறு ஹரியானாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ராகுல் திவேதியா கூறினார்.