டெல்லி: நடந்து முடிந்த ஐபிஎல் 15வது சீசனில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு, இந்திய அணிக்குள் நுழைவதற்கு அழைப்பு வந்தது. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் அவரது பெயர் சேர்க்கப்பட்டதன் மூலம், உம்ரான் தனது கனவை நனவாக ஒரு படி நெருக்கமானதை உணர்ந்தார்.
ஆனால் சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களான அவேஷ் கான் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் இருப்பதால், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் உம்ரான் மாலிக் பெஞ்சில் அமரவைக்கப்பட்டு, காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும் இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணியில் எந்தவொரு மாற்றமும் செய்யாததால், ஒரே லெவன் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முழுவதும் விளையாடியது. இதனையடுத்து அனைத்து வீரர்களின் திறமை மீதும் டிராவிட் வைத்த நம்பிக்கைக்கு சான்றாக, இத்தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது.
இந்நிலையில் முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் கூறுகையில், “உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான், இந்திய அணிக்காக இதற்குமுன் விளையாடி சிறப்பாக செயல்பட்டவர். மேலும் ஆட்டத்தின் அனைத்து நிலைகளிலும் சிறப்பாக பந்துவீசியுள்ள ஆவேஷ் கானை தேர்ந்தெடுத்ததன் மூலம் டிராவிட் சரியானதைச் செய்துள்ளார்.
இவரைப் போலவே ஹர்ஷல் படேலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே உம்ரான் மாலிக்கை தடுத்து நிறுத்தியதில் எனக்கு எந்தத் தவறும் இல்லை.22 வயதான வேகப்பந்து வீச்சாளரை பொறுத்தவரை, ஒரு அற்புதமான ஐபிஎல் வைத்திருந்தாலும், இந்திய அணியில் விளையாடுவதற்கு அவருக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். அனைவரும் நியாயமான வெற்றியைப் பெற வேண்டும். எனவே டிராவிட் சரியானதை தான் செய்கிறார்” இவ்வாறு டெலிகிராப்பிடம் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
மேலும் உம்ரான் மாலிக்கை பற்றியும் அவரது திறமையை பற்றியும் அதிகம் பேசியுள்ள முன்னாள் இந்திய தலைமை தேர்வாளர் திலீப் வெங்சர்க்கார் கூறுகையில், “இந்திய வேகப்பந்து வீச்சாளரைத் தடுத்து நிறுத்தியதற்குக் காரணம், அவரை களமிறக்க ஒரு சரியான தருணத்தை எதிர்பார்த்துதான்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “நான் அணி நிர்வாகத்தில் அங்கம் வகிக்காததால், இதுகுறித்து நான் கருத்து தெரிவிப்பது நியாயமில்லை. ஆனால் உம்ரான் உடனடியாக விளையாடாதது அணியின் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம். உங்களுக்குத் தெரியாது. அவர்கள் சரியான சந்தர்ப்பத்தில் அவரை களமிறக்க காத்திருக்கிறார்கள்,” இவ்வாறு வெங்சர்க்கார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Hi everyone, it’s my first pay a visit at this web
page, and article is really fruitful for me, keep up posting these types of articles.